×

மொரப்பூர் பகுதியில் பச்சை மிளகாய் விளைச்சல் ஜோர்

அரூர், ஏப்.8: மொரப்பூர் பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் கிலோ ₹25க்கு விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் மிளகாய் பயிரிட்டுள்ளனர். 3 மாத காலத்தில் விளைச்சல் தர தொடங்கி, சுமார் ஒன்றரை வருடம் வரை தொடர்ந்து காய்க்கும் தன்மை கொண்டது. தற்போது அரூர் பகுதியில் மிளகாய் அதிகம் விளைந்துள்ளதால், கிலோ ₹25க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரித்ததால், விலை குறைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : region ,Morpore ,
× RELATED தைவானைச் சுற்றிலும் 2வது நாளாக நவீன...